டெல்லியில் தொடர்ந்து 11 நாட்களாக போராடி வரும் தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்து நடிகர்கள் விஷால், பிரகாஷ் ராஜ், இயக்குநர் பாண்டிராஜ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. அந்த சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.


தொடர்ந்து 11-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளை, நடிகர்கள் விஷால், பிரகாஷ்ராஜ், கார்த்தி, இயக்குநர் பாண்டிராஜ் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து போராட்டத்துக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.


தமிழக விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது. எனவே, மத்திய, மாநில அரசுகள் அவர்களது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினர்.