ரூபாய் 10 கோடி மதிப்புள்ள 1.9 கிலோ கோகோயினை கடத்த முயற்சி செய்த அமெரிக்க பெண்ணை ஒருவரை டெல்லி நார்கோடிக்ஸ் கன்ட்ரோல் பீரோ குழு கைது செய்தது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கைது செய்யப்பட்ட நபர் ஸ்டீபனி கபிரியோ பார்கார்பியோ என அடையாளம் காணப்பட்டுள்ளார். தேசிய தலைநகர் பகார்கான் பகுதியில் உள்ள பிங்க் சிட்டி ஹோட்டலில் இவர் கைது செய்யப்பட்டார்.


விசாரணையில் பெரும் அளவிலான கோகோயின், பிரேசிலில் உள்ள ஒரு நைஜீரியானால் பரிமாற்றப்படுகிறது எனவும், அதற்கு பின்னரே இந்தியாவிற்கு இவர் கொண்டு வந்தார் எனவும் அப்பெண்மனி தெரிவித்தார். 


மேலும் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி ஸ்பெயின், சுவிட்சர்லாந், உகாண்டா போன்ற நாடுகளில் பயணித்துள்ளார் என்பது அவரது பாஸ்போர்ட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



2017-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை டெல்லியில் 26.34 கிலோ கோகெய்ன் பறிமுதல் செய்யப்பட்டு. இச்சம்பவங்களில் 20 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் தென் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.