புதுடெல்லி: ஜனவரி 31-ம் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கோவிட் விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஷிப்ட் முறையில் செயல்படும் என்றும் நாளின் தனித்தனி நேரங்களில் தலா ஐந்து மணி நேரம் கூடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  மாநிலங்களவை முதல் பாதி நேரத்திலும்,  மக்களவை இரண்டாம் பாதியிலும் கூட உள்ளன .


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடாளுமன்ற அமர்வுகளின் போது, ​​கோவிட்-19 தொற்றுநோய்க் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, மக்களவை மற்றும் மாநிலங்கள அவையில் உள்ள அறைகள் மற்றும் கேலரிகள் உறுப்பினர்கள் அமர்வதற்குப் பயன்படுத்தப்படும் என்று மக்களவை செய்தி குறிப்பு கூறுகிறது. 


மத்திய பட்ஜெட் தாக்கல் (Union Budget 2022) செய்வதற்காக பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 11 மணிக்கு மக்களவை கூடும் நிலையில், பின்னர் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநிலங்கள் அவை இயங்கும் நேரம் குறித்து, இன்னும் முறையாக அறிவிக்கப்படாத நிலையில்,  மாநிலங்கள் அவை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை கூடும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.


ALSO READ | Budget 2022: மாத சம்பளம் வாங்குவோரின் முக்கிய எதிர்பார்ப்புகள் என்ன? நிறைவேற்றுமா அரசு?


மாநிலங்கள் அவை தலைவரும், குடியரசு துணை தலைவருமான எம்.வெங்கையா நாயுடு கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் நேரம் குறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.


நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது. அமர்வின் இரண்டாம் பகுதி மார்ச் 14 முதல் ஏப்ரல் 8 வரை நடைபெறும். ஆனால் நாடாளுமன்ற இரண்டாம் கட்ட அமர்வுகளின் நேரம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.


ALSO READ | Budget 2022: பெண்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுமா? எதிர்பார்ப்புகள் என்ன?


2020 ஆம் ஆண்டின் மழைக்காலக் கூட்டத்தொடர், கோவிட் நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற்ற முதல் முழு அமர்வாகும். நாளின் முதல் பாதியில் மாநிலங்கள் அவை கூட்டமும், இரண்டாவது பாதியில் மக்களவை கூட்டமும் நடைபெற்றது. 2021 பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது.


கடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி மற்றும் மழைக்கால மற்றும் குளிர்கால அமர்வுகளில், மநிலங்கள் அவை மற்றும் மக்களவை ஆகியவை வழக்கமான நடைமுறைக்கு திரும்பின, ஆனால் உறுப்பினர்கள் சமூக இடைவெளியை உறுதி செய்வதற்காக அந்தந்த அவைகளின் அறைகளிலும் கேலரிகளிலும் அமர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | Budget 2022: மாத சம்பளம் வாங்குவோரின் முக்கிய எதிர்பார்ப்புகள் என்ன? நிறைவேற்றுமா அரசு?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR