ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் பகுதியில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியுள்ளது!! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அளவானது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. 


ANI தகவலின் படி, இந்நிலநடுக்கமானது சரியாக இன்று காலை சுமார் 9:43மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது என்று தெரியவந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ உயிர் சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதும் தெரியாவில்லை. 



நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின, இதனால் மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் பற்றி இதுவரை வரை எந்த தகவலும் இல்லை!