ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் செக்டார் ராணுவ டிரக் தீபற்றியதில் இருவர் பலி! இது விபத்தா?
Army Truck Catches Fire: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் ராணுவ டிரக்கில் தீப்பிடித்தது! பலி எண்ணிக்கை எவ்வளவு? விபத்திற்கான காரணம் என்ன?
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனம் தீப்பற்றி எறிந்ததிஹ்ல் இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் வியாழக்கிழமை ராணுவ வாகனத்தில் வெடித்ததாக சந்தேகிக்கப்படும் தீ விபத்தில் இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக செய்தி நிறுவனமான பி.டி.ஐ. தெரிவித்துள்ளது.
பூஞ்ச் மாவட்டம், பாடா துரியன் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, மின்னல் தாக்கியதால் வெடிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.
இரண்டு மூன்று ஜவான்கள் இந்த விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என்று உள்ளூர் மக்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது பூஞ்ச் நகரிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்திற்கு ராணுவம் மற்றும் காவல்துறையினர் விரைந்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | மத்திய அரசால் தமிழ்நாட்டில் தடுப்பூசி இல்லை... சொன்னது அமைச்சர் மா. சுப்பிரமணியன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ