மத்திய அரசால் தமிழ்நாட்டில் தடுப்பூசி இல்லை... சொன்னது அமைச்சர் மா. சுப்பிரமணியன்

Covid Vaccines In Tamil Nadu: கொரானோ தடுப்பூசி அனுப்புவதை  மத்திய அரசு நிறுத்திவிட்டதால் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி இருப்பு இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 1, 2023, 10:15 PM IST
  • தடுப்பூசி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
  • ஊரடங்கு குறித்தும் அமைச்சர் பேச்சு.
மத்திய அரசால் தமிழ்நாட்டில் தடுப்பூசி இல்லை... சொன்னது அமைச்சர் மா. சுப்பிரமணியன் title=

Covid Vaccines In Tamil Nadu: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கொரானோ நோய் பரவுதல் அதிகரித்து வரும் நிலையில், இன்று முதல் அரசு மருத்துவமனைகளில் முக கவசம் கட்டாயமாக்கபட்டுள்ளது. 

எனவே, அந்த உத்தரவு முறையாக பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்த அமைச்சர் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு, பொதுப்பிரிவு போன்ற பகுதிகளிலும் ஆய்வு நடத்தி முகக்கவசம் அணியாதவர்களுக்கு முகக்கவசம் வழங்கினார்.

மேலும் படிக்க | விடுதலை படத்தை குழந்தைகள் பார்க்கலாமா... ரோகிணி தொடர்ந்து அடுத்த பிரச்னை - முழு விவரம்!

தனியார் மருத்துவமனையில்...

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பரமனியம்,"தற்போது தடுப்பூசி உற்பத்தியை ஒன்றிய அரசு நிறுத்திவிட்டதால், மாநில அரசுகளுக்கு அனுப்புவதையும் நிறுத்திவிட்டது. இதனால், கொரானோ தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி என்பது தமிழக அரசு மருத்துவமனையில் இருப்பு என்பது இல்லை. தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனையில் இருப்பு இருந்தால் அதனை போட்டுக்கொள்ளலாம். 

மேலும், வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளில் தற்போது 2 சதவிகித ரேண்டம் பரிசோதனை மட்டுமே செய்யப்படுகிறது. அதில் நாள் ஒன்றுக்கு, 8 முதல் 10 கொரானோ பாதிப்பு கண்டறியப்படுகிறது. அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஊரடங்கு...!

ஆனால், அனைவரையும் பரிசோதிக்கும் வகையில் இதுவரை ஒன்றிய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடவில்லை. அதே நேரத்தில் தமிழகத்தில் நோய் எதிர்ப்பு ஆற்றல் 90 சதவிகிதம் உள்ளதால் தமிழகத்தில் இதுவரை பெரிய பாதிப்பு இல்லை. 

அதே சமயத்தில் தேவையான அளவிற்கு கொரானோ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதிகள் தயாராக உள்ளது. கொரானோ பாதிப்பு அதிகரித்தாலும்  ஊரடங்கு என்பது தற்போது இல்லை" என தெரிவித்தார்.

மேலும் படிக்க | கொல்கத்தாவில் முதியவரை பாதித்த தாவர பூஞ்சை நோய் - உலகிலேயே முதல் பாதிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News