கடத்தலில் ஈடுபட்டதாக பஞ்சாபி பாக் பகுதி போலீசாரால் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு அருகே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரளாகி வருகிறது...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி பஞ்சாபி பாக் பகுதி போலீசார் சில தினங்களுக்கு முன்பு பிரபா முன்னி என்ற பெண்ணை ஆள்கடத்தல் வழக்கில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்தனர். இவர் என்.ஜி.ஓ நடத்தி வரும் இவர் வேலை வாங்கி தருவதாக கூறி இளம் பெண்களை கடத்தியதாக புகார் அளிக்கப்பட்டது. இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்துள்ளார். இவரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். 


இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் கடத்தல் தற்போது கைதாகி உள்ள பிரபா முன்னி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பலரும் இணையத்தில் பரப்பி வருகின்றனர். கடத்தல் காரர்களுடன் முதல்வருக்கு நட்பா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. இத புகைப்படம் இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.