டெல்லி மஜ்ரா தாபஸ் பகுதியில் புதன்கிழமை, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஏ.டி.எம்-ல் காவலாளியை தாக்கி இரண்டு பைக்கர்ஸ் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். ஏடிஎம் 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவலாளியை தாக்கியதோடு மட்டுமின்றி அவர் கையில் இருந்த துப்பாக்கியையும் எடுத்து சென்றனர். இதையடுத்து, ஏ.டி.எம் காவலாளியை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த 


சம்பவம் சி.சி.டிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதை தொடர்ந்து இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 394/397 மற்றும் ஆயுத சட்டத்தின் பிரிவு 25/27 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு ஒன்று பதிவு செய்து விசாரித்து வருங்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 


 



 


இது போன்று மற்றொரு ஏடிஎம் கொள்ளை முயற்சி கும்பல் ராஜஸ்தானில் கேமராவில் பிடிபட்டது. அந்த கேமராவில் நான்கு கொள்ளையர்கள் பிடிபட்டனர், ராஜஸ்தான் புன்டியின் 


மத்திய வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தையே திருடினர்.