Crime News In India: பெங்களூருவில் உள்ள BPO நிறுவனம் ஒன்றில் 22 வயதான இளம்பெண் ஒருவர் பணிபுரிந்து வந்தார். அதே அலுவலகத்தில் பணிபுரிந்த 25 வயது இளைஞரான ஆதித்யா சந்தோஷ் உடன் அவர் காதல் உறவில் இருந்து வந்தார். இந்த நிலையில், தனது காதலரின் போனை எடுத்த அவர் யதார்த்தமாக புகைப்படங்களை சேகரித்து வைக்கும் கேலரிக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது தான் அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

13,000 அந்தரங்க புகைப்படங்கள்


அவரது போனில் கிட்டதட்ட 13 ஆயிரம் பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் இருந்துள்ளன. அதில் அவரது புகைப்படங்களும், அவரது அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களின் புகைப்படங்களும் கூட இருந்துள்ளதை பார்த்து அந்த பெண் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றுள்ளார். கடந்த 4 மாதங்களாக ஆதித்யா சந்தோஷ் உடன் இவர் காதல் உறவில் இருந்துள்ளார். 


அப்போது தனிமையில் இவர்கள் உல்லாசமாக இருந்ததையும் ஆதித்யா வீடியோவாக பதிவு செய்துள்ளார். அதனை டிலீட் செய்ய பார்த்த போது தான், தன்னைப்போல பல பெண்களின் புகைப்படங்கள் இருந்ததையே அவர் பார்த்துள்ளார். அதில் பல புகைப்படங்கள் தொழில்நுட்ப உதவியுடன் எடிட் செய்யப்பட்டது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் அலுவலகத்தில் உள்ள சீனியர்களை அலெர்ட் செய்து தனக்கு உதவுமாறு கேட்டுள்ளார்.


மேலும் படிக்க | ஒரே அடியில் கணவனை கொலை செய்த மனைவி! நாட்டையே உலுக்கிய கொடூரம்! முழுப் பின்னணி!


ஆதித்யா கைது


இதனையடுத்து அந்த பெங்களூரு BPO-வின் தலைமை நிர்வாகி ஒருவர் காவல் நிலையத்தில் ஆதித்யா சந்தோஷ் மீது புகார் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அந்த நிர்வாகி, இதுவரை அலுவலகத்தில் உள்ள எந்த பெண்களிடமும்  ஆதித்யா மோசமாக நடந்துகொள்ளவில்லை என்றும், எந்த நோக்கத்திற்காக அவர் இவ்வாறு செய்தார் என்பது தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 


மேலும், கடந்த 5 மாதங்களாக ஆதித்யா இந்த நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், அலுவலக கம்ப்யூட்டரில் மார்பிங் வேலையை அவர் செய்யவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து அலுவலகத்தில் வைத்தே போலீசார் அந்த இளைஞரை கைது செய்துள்ளனர்.


காரணம் என்ன?


13 ஆயிரம் நிர்வாண புகைப்படங்களை ஏன் இந்த இளைஞர் தனது போனில் வைத்திருந்தார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் சில போட்டோக்கள் உண்மையாகவே எடுக்கப்பட்டது என்றும், இந்த போட்டோக்களை வைத்து அதில் இருக்கும் பெண்களை இவர் மிரட்டினாரா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். 


தனது காதலனின் போனில் இப்படி ஆயிரக்கணக்கில் நிர்வாண புகைப்படங்களைக் கண்ட பெண் சக ஊழியர்களின் உதவியுடன் போலீஸில் புகார் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல பெண்களின் புகைப்படங்கள் உள்ளதால் போலீசார் ரகசியமாக ஆதித்யா சந்தோஷுன் போனை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் படிக்க | தாம்பரம் டூ ராஜபாளையம் - பிரபல ரவுடி சைலுவை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தனிப்படை போலீசார்... யார் இவர்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ