பீகார் ஆட்டோ ஓட்டுனர் சீட்பெல்ட் அணியாததால் ஓட்டுனருக்கு ₹.1,000 அபராதம் விதித்த போக்குவரத்து காவல் துறையினர்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மோட்டார் வாகன திருத்த சட்டத்தின் கீழ் புதிய அபராத விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், புதிய மோட்டார் வாகனங்கள் சட்டத்தில் 5 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டிருப்பதற்கு பலரும் தங்களின் அதிருப்தியை பதிவு செய்து வருகின்றனர். போலீசார் அபராதத் தொகையை வசூலிப்பதை பாதி குறைத்துக் கொண்டால்கூட அது வருமான வரி, GST வசூலையும் தாண்டியிருக்கும் என்று பலரும் டிவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 


இந்நிலையில், பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள சாராயாவில் சவாரி செய்யும் போது ஆட்டோ ஓட்டுனர் சீட்பெல்ட் அணியாததால் ஓட்டுனருக்கு ₹.1,000 அபராதம் விதித்த போக்குவரத்து காவல் துறையினர். இது குறித்து அஜய் குமார் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி (SHO) சரையா கூறுகையில், ஆட்டோ டிரைவர் மிகவும் ஏழை என்பதால் சீட் பெல்ட் அணியவில்லை. எனவே, அவரை குறைந்தபட்ச தொகையான  ரூ .1000 மட்டுமே செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். இது ஒரு தவறு, ஆனால் ஓட்டுநருக்கு குறைந்தபட்ச அபராதம் விதிப்பதற்காகவே இது செய்யப்பட்டது "என்று தெரிவித்தார். 


சாமீபகாலமாக போக்குவரத்து விதிகளை மீறியதற்காக லாரோ ஓட்டுனருக்கு 6 லட்சம் வரை அபராதம் விதிக்கபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.