உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் வித்தியாசமான முறையில், இரண்டு பெண்களுக்கு இடையே ஒரு 'தனிப்பட்ட' ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதாவது, இரண்டு பெண்களுமே ஒரே நபரைதான் திருமணம் செய்துள்ளனர். இதில், அந்த நபர் எத்தனை நாள்கள் இருவரோடும் தனித்தனியாக வசிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யவே இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த ஒப்பந்ததின் மூலம், அந்த நபரின் மனைவிகள் ஒரு முடிவை எடுத்துள்ளனர். தங்கள் கணவர், வாரத்தில் தலா 3 நாள்கள் ஒருவருடன் இருக்க வேண்டும் எனவும், மீதம் இருக்கும் வாரத்தின் 7ஆவது நாளில், யாருடன் இருக்க வேண்டும் என்பதை தங்கள் கணவரே முடிவு எடுக்கட்டும் என ஒப்பந்ததில் மனைவிகள் குறிப்பிட்டுள்ளனர். 


ஒப்பந்தத்தின்படி, அவரது மனைவிகள் இருவரும் தங்கள் மாமியார்களுடன் வாழ்வார்கள். இரு மனைவிகளுக்கு இடையே தகராறு அதிகரித்ததைத் தொடர்ந்து இரண்டு மனைவிகளில் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பிறகே, இந்த ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது. இந்த வழக்கு ஆலோசனைக்காக உத்தரப் பிரதேசத்தின் நாரி உத்தன் கேந்திராவுக்கு மாற்றப்பட்டது. https://zeenews.india.com/tamil/india/serial-killer-who-targets-older-women-in-uttar-pradesh-3-murders-recorded-427918


மேலும் படிக்க | காசியாபாத்தில் 6 வயது சிறுமி அடித்துக் கொலை! ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்!


மேலும் சிவில் தகராறுகளைத் தீர்ப்பதில் காவல்துறைக்கு உதவும் தனியார் குழு, இந்த வினோதமான முடிவை எடுத்தது. திங்கள் முதல் புதன் வரை கணவன் முதல் மனைவியுடன் இருப்பார் எனவும் அதேசமயம், வியாழன் முதல் சனிக்கிழமை வரை, அவர் தனது இரண்டாவது மனைவியுடன் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதும் மூவரும் ஒன்றாக வீட்டுக்குச் சென்றனர்.


முன்னர், அந்த நபரின் மனைவிகளில் ஒருவர் அளித்த புகாரில், '2017இல் தன்னை திருமணம் செய்த பிறகு, தனது கணவர் தன்னை மாமியார் வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல், நகரத்தில் வாடகை வீட்டில்தான் இருக்க வைத்தார்' என குறிப்பிட்டார்.


இருப்பினும், அந்த நபரின் தன்னை மாமியார் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு வற்புறுத்தியதால், அந்த நபர் தலைமறைவானார். கணவனைத் தேடி, அந்தப் பெண் அந்த நபரின் பெற்றோரின் வீட்டை தேடி கண்டுபிடித்துள்ளார். அங்கு அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 


இதையடுத்து எஸ்எஸ்பி அலுவலகத்தில் அந்த பெண் புகார் அளித்தார். பின்னர் இந்த வழக்கு நாரி உத்தன் கேந்திராவுக்கு கவுன்சிலிங்கிற்காக மாற்றப்பட்டது. அந்த நபருக்கு தனது இரண்டாவது மனைவியிடம் இருந்து ஒரு பெண் குழந்தையும் உள்ளது.


மேலும் படிக்க | இந்திய விமானத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... தரையிறக்கப்பட்டது எங்கு தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ