தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை விமர்சித்த குலாம் நபி ஆசாத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த செவ்வாய் அன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டத்துக்கு சென்று, காஷ்மீரின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.


அப்போது நடைபாதையில் மக்களுடன் சேர்ந்து அவர் உணவு சாப்பிடுவதும், அவர்களுடன் உரையாடுவதும் புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் வெளியாகி ‘வைரல்’ ஆனது.


இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்திடம் கேட்டபோது, “பணத்தால் யாரை வேண்டுமானாலும் வாங்கலாம்” என்று கூறினார்.


அவரது கருத்துக்கு பாஜக தலைவர்கள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தியது. கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன் தெரிவிக்கையில்., 


குலாம் நபி ஆசாத்தின் கருத்து துரதிருஷ்டவசமானது. நான் வன்மையாக கண்டிக்கிறேன். பாகிஸ்தானிடம் இருந்துதான் இத்தகைய குற்றச்சாட்டுகளை எதிர்பார்க்க முடியும். ஆனால், காங்கிரஸ் போன்ற பெரிய அரசியல் கட்சியிடம் இருந்து இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த குற்றச்சாட்டை சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் பயன்படுத்த வாய்ப்புள்ளது. ஆகவே, ஆசாத் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.


பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ், செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சம்பித் பத்ரா தெரிவிக்கையில்., "இந்தியாவில் நல்ல விஷயங்கள் நடக்கும்போதெல்லாம், பாகிஸ்தானும், காங்கிரஸ் கட்சியும் ஒரே குரலை எதிரொலிக்கின்றன. ஒன்று பாகிஸ்தான் காங்கிரஸ் குரலை எதிரொலிக்கும், அல்லது காங்கிரஸ் பாகிஸ்தான் குரலை எதிரொலிக்கும். தற்போது இது தான் நடந்துள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.