உத்தரப்பிரதேசம் மாநிலம் நூர்பூர் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ லோகேந்திர சிங் இன்று காலை சீதாபூரில் நடந்த சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரப்பிரதேசம் மாநிலம் நூர்பூர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் லோகேந்திர சிங். இன்று காலை தனது காரில் அவர் சென்று கொண்டிருந்த போது, சிதாபூர் அருகே சாலையின் எதிரே வந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியது.


இந்த விபத்தில் லோகேந்திர சிங் அவருடன் பாதுகாப்பு பணியில் இருந்த இரண்டு காவல் துறையினர் மற்றும் கார் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தனர். 


லாரி அதிவேகத்தில் விரைந்து வந்து கார் மீது மோதிக்கொண்டதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




மேலும், இது தொடர்பாக விவரம் அறிந்த பிரதமர் மோடி சாலை விபத்தில்  உயிரிழந் பா.ஜ.க எம்.எல்.ஏ லோகேந்திர சிங்கின் சேவை எப்பொழுதும் நினைவுகூரப்படும். பிரிவில் தவிக்கும் அவரது குடும்பத்தினரருக்கு என்னுடைய அழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.