தில்லியில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை வரும் 29-ம் தேதி தொடங்கவும் பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்யவும் நடத்தலாம் என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை கமிட்டி (CCPA) பரிந்துரை செய்துள்ளது. 


மேலும் பட்ஜெட் கூட்டத்தொடர் இரு கட்டங்களாக நடத்தப்படும் என்றும், ஜனவரி 29ம் தேதி தொடங்கும் கூட்டத்தொடர் பிப்ரவரி 15ம் தேதி வரை தொடரும் எனவும், அதன் இரண்டாவது பாகம் மார்ச் 8ம் தேதி முதல், ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.


தில்லியில் கொரோனா வைரஸ் (Corona Virus) பரவல் காரணமாக நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. குளிர்காலக் கூட்டத் தொடரை வரும் பட்ஜெட் கூட்டத்தொடரோடு சேர்த்து நடத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கடிதம் மூலம் தெரிவித்தது.


ALSO READ | கொச்சி-மங்களூரு குழாய் எரிவாயு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும்: பிரதமர் மோடி


கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரின் போது, பல எம்.பி.க்கள், நாடாளுமன்ற ஊழியர்கள், பாதுகாவலர்கள் எனப் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால், திட்டமிடப்பட்டதற்கு முன்னதாகவே கூட்டத்தொடர் நிறைவடைந்தது.


இந்த முறை அதேபோன்ற சூழல்  உருவாகிவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, கூட்டத்தொடர் நடத்துவது தொடர்பாக மத்திய அரசு மிகவும் கவனத்துடன் ஆலோசித்து குளிர்காலக் கூட்டத்தொடரை ரத்து செய்தது.


இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்துவது தொடர்பாக ஆலோசனை செய்ய நாடாளுமன்ற (Parliament) விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை இன்று கூடியது. இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை வரும் 29-ம் தேதி கூட்டலாம் என்றும், வரும் ஏப்ரல் 8-ம் தேதி வரை கூட்டத்தொடர் நடத்தலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டது.


பொது பட்ஜட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யலாம். முதல்கட்டக் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 15-ம் தேதி வரை நீடிக்கும் இரண்டாவது  கட்டக் கூட்டத்தொடர் மார்ச் 8-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது.


குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் (Ramnath Kovind) வரும் 29-ம் தேதி நாடாளுமன்றக் கூட்டுக்குழுக் கூட்டத்தில் உரையாற்றி, கூட்டத்தொடரைத் தொடங்கி வைப்பார். கூட்டத்தொடரின் போது கொரோனா பரவலை தடுக்கும் நோக்கிலான விதிமுறைகள் கடுமைமையாகப் பின்பற்றப்படும். எம்.பி.க்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து அமரும் வகையில் இருக்கைகள் மாற்றி அமைக்கப்படும் எனவும் கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


ALSO READ | இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் ரத்து


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR