தவாங் மோதல் குறித்து சீனா அறிக்கை: அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங்கில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதல் குறித்து இந்தியா கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதோடு, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கிடையில், இந்தியா-சீனா  மோதல் மற்றும் எல்லை தகராறு குறித்த சீனாவின் முதல் அறிக்கை வெளிவந்துள்ளது. மேலும் இந்தியாவுடனான தனது எல்லையில் நிலைமை சீராக இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இராஜதந்திர மற்றும் இராணுவ வழிகள் மூலம் பேச்சுவார்த்தை தொடர்கிறது: சீனா


அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) இந்திய-சீன வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து இந்தியா எழுப்பிய போது, ​​எல்லையில் நிலைமை சீராக இருப்பதாக சீனா கூறியது. இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், 'நாங்கள் புரிந்து கொண்ட வரையில், சீனா-இந்தியா எல்லையில் ஒட்டு மொத்தமாக நிலைமை சீராக உள்ளது. மேலும் அவர் கூறுகையில்,  ‘எல்லை விவகாரம் தொடர்பாக தூதரக மற்றும் ராணுவ வழிகள் மூலம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது’ என்றார்.


மேலும் படிக்க | அருணாச்சல பிரதேசத்தில் வாலாட்டிய சீன ராணுவம்... இந்திய சீன படைகள் மோதல்! 


தவாங் மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த விளக்கம் 


முன்னதாக, இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், தவாங்கில் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதல் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அறிக்கை அளித்தார். டிசம்பர் 9, 2022 அன்று, எல்லையில் உள்ள தவாங் செக்டாரின் யாங்சே பகுதியில் உள்ள நிலையை மாற்ற சீனா முயன்றதாகவும், சீனாவின் இந்த முயற்சியை இந்திய ராணுவம் தைரியமாக எதிர் கொண்டு தடுத்ததாகவும் அவர் கூறினார். இந்திய இராணுவம் நடத்திய தாக்குதலா, PLA துருப்புக்கள் தங்கள் பதவிக்குத் திரும்பும் நிலை ஏற்பட்டது.


இதனுடன், நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவம் குறித்து தகவல் அளித்த ராஜ்நாத் சிங், இந்த மோதலில் இந்தியா மற்றும் சீனாவின் சில வீரர்கள் காயம் அடைந்துள்ளனர், ஆனால் யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை என்றும் கூறினார். இந்த சம்பவத்தில் இந்திய ராணுவ வீரர்கள் யாரும் வீரமரணம் அடையவில்லை என்றும், யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.


இந்தியா மற்றும் சீனா இடையே கொடி சந்திப்பு


மேலும் ராஜ்நாத் சிங் கூறுகையில், 'இந்திய ராணுவ தளபதிகளின் சரியான நேரத்தில் தலையீடு காரணமாக, சீன ராணுவம் மீண்டும் தங்கள் நிலைகளுக்கு சென்றது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, அப்பகுதியின் உள்ளூர் தளபதி 11 டிசம்பர் 2022 அன்று நிறுவப்பட்ட ஏற்பாட்டின் கீழ் தனது சீனப் பிரதிநிதியுடன் ஒரு கொடி கூட்டத்தை நடத்தி, சம்பவம் குறித்து விவாதித்தார். சீனத் தரப்பு அத்தகைய நடவடிக்கையை மறுத்ததுடன், எல்லையில் அமைதியைப் பேணுமாறு கேட்டுக் கொண்டது. இந்த விவகாரம் சீன தரப்பிலும் தூதரக மட்டத்தில் எழுப்பப்பட்டது.


இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல்கள் நடப்பது புதிதல்ல. முன்னதாக 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் கால்வன் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கர்னல் சந்தோஷ் பாபு உட்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஆனால் சீனா தனது ராணுவ வீரர்களின் மரண எண்ணிக்கையை மறைத்து வந்தது. அதில் அவரது வீரர்கள் 38 பேர் கொல்லப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. 


மேலும் படிக்க | அங்கோர் வாட் கோயிலை மறுசீரமைக்கும் மத்திய அரசு; அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்


மேலும் படிக்க | 'நீங்க ஏன் நம்பர் 1 ஆகல...?' அசால்ட்டாக ஆன்சர் சொன்ன ஆனந்த் மஹிந்திரா...


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ