காஜியாபாத்: உத்திரபிரதேச மாநிலத்தின் காஜியாபாத்தில், 5-வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய 11-வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஜியாபாத்தின் முராட்நகர் பகுதியினை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியாதாக அதே பகுதியை சேர்ந்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.


காஜியாபாத்தின் முராட்நகர் பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளி ஒருவரின் மகள் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார். இக்குற்றச் செயலில் ஈடுப்பட்டவர், சிறுமியின் எதிர் வீட்டியில் வசித்து வரும் சிறுவன் என தெரியவந்துள்ளது.


கடந்த வெள்ளி மாலை நடைப்பெற்ற இச்சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை தெரிவிக்கையில்., வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுமியிடம் திண்பண்டம் வாங்கி தருவதாக கூறி அருகில் இருக்கும் தனிமையான பகுதிக்க கொண்டு சென்று சிறுவன் குற்றச்செயலில் ஈடுப்படுள்ளான் என தெரிகிறது.


சிறுமியின் தந்தை காவல்துறையில் கொடுத்த புகாரின் பேரில் சிறுவன் கைது செய்யப்பட்டு IPC பிரிவு 376 மற்றும் POCSO Act பிரிவு 4 மற்றும் 5-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் 11-வயதாகும் சிறுவன் 3-ஆம் வகுப்பு படிப்பதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமி 5-வயதுடையவர் எனவும், ஆரம்ப பள்ளியில் பயின்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.


முன்னதாக இதே முராட்நகர் பகுதியில் கடந்த அக்டோபர் 10-ஆம் நாள் 7-வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தகது