காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, குஜராத்தின் கெஷோட் விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காகவும். காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ. மற்றும் கட்சித் தொழிலாளர்கள் உடனான கூட்டத்தில் கலந்துகொள்வதர்காகவும் இந்த பயணத்தினை அவர் பயன்படுத்திக்கொள்கிறார் என தெரிகிறது.



சில தினங்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிகழ்வினை அக்கட்சியின் தொண்டர்கள் நாடு முழுவதும் கொண்டாடினார்கள். 


ராகுல் காந்தி கட்சியின் தலைவராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து கட்சிப் பொறுப்பில் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவர் தலைவராக பொறுப்பேற்றப்பின், அவரது தலைமையிலான முதல் செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.


இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மாணங்களைப் குறித்து, இன்றைய எம்.எல்.ஏ. மற்றும் கட்சித் தொழிலாளர்கள் உடனான கூட்டத்தில் உரையாடல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது!