புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கமும் பரவலும் அதிகரித்திருக்கும் நிலையில் புதிதாக பலருக்கு தொற்றுநோய் பரவியிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் கொரோனாவின் உச்சக்கட்டம் தணியத் தொடங்கிவிட்டதாக தெரிகிறது. ஆனால், இறப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பது கவலைகளை அதிகரித்துள்ளது.


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,08,921 பேருக்கு புதிதாக COVID நோய் ஏற்பட்டுள்ளது.  4,157 பேர் கொரோனாவுக்கு பலியாகியிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


Also Read | Farmers Protest: 6 மாதங்களாய் தொடரும் விவசாயிகள் போராட்டத்தின் ‘கருப்பு நாள்’ இன்று


இதனையடுத்து, நாடு முழுவதும் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 24,95,591ஆக  உள்ளது.  


இந்தியாவில் கொரோனா தொடர்பான அண்மை தரவுகள் இவை: 
மொத்த பாதிப்பு எண்ணிக்கை: 2,71,57,795
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை: 2,43,50,816
இறப்பு எண்ணிக்கை: 3,11,388
தற்போது பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை: 24,95,591


நாட்டில் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை: 20,06,62,456



செவ்வாயன்று, தொற்றுநோய் பாதிப்பை தெரிந்துக் கொள்வதற்காக நாடு முழுவதும் 22,17,320 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுதான் ஒரு நாளில் செய்யப்பட்ட அதிகபட்ச பரிசோதனை என்பது குறிப்பிடத்தக்கது.


Also | Ship fire off Colombo: சரக்குக் கப்பலின் தீயை அணைக்க 2 கப்பல்களை அனுப்பியது ICG


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR