கேரளா: ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை ஒவ்வொரு மாதமும் தனது ஊழியர்கள் மற்றும் பிற அரசு நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களின் ஆறு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என அறிவித்த கேரள அரசின் உத்தரவை கேரள உயர் நீதிமன்றம் இன்று (செவ்வாயன்று) நிறுத்தி வைத்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பெச்சு குரியன் தாமஸ் [Bechu Kurian Thomas,] இதுபோன்ற உத்தரவை பிறப்பிக்க மாநில அரசாங்கத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் சட்டம் இருக்கிறதா என்பதை கண்டறிய நீதிமன்றம் விருபுகிறது, அதுதவிர, இந்த சம்பள தொகை பிடித்தம் செய்ய முன்மொழியப்பட்ட அல்லது பயன்படுத்தப்பட வேண்டிய விதம் குறித்து தெளிவற்ற தன்மை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


அரசாங்க உத்தரவு COVID-19 நிலைமை காரணமாக அரசாங்கம் எதிர்கொள்ளும் நிதி சிக்கல்களை மட்டுமே குறிப்பிடுகிறது. நிதி சிரமம் காரணமாக அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்வது என்பது சரியானதாக இல்லை. எந்த நோக்கங்களுக்காகவும் ஒருவரின் சம்பளத்தை ஒத்திவைத்தல் என்பது சொத்துக்களை மறுப்பதாகும் எனவும் நீதிபதி கூறினார். 


முன்னதாக மனுதாரர் தரப்பில் வாதிட்ட வக்கீல், அரசியலமைப்பின் 300 ஏ பிரிவு (சொத்துரிமை) அதன் வரம்புக்குட்பட்ட "சம்பளமும்" அடங்கும் என்று வாதிட்டார். சட்டத்தின் அதிகாரத்தில் எந்தவொரு நபரும் தனது சொத்துக்களை இழக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது என்று வாதிட்டார். 


சம்பளக் கொடுப்பனவை ஒத்திவைக்க எந்தவொரு சட்டமும் அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கவில்லை என்று அவர்கள் மேலும் வாதிட்டார். மற்ற மாநில அரசாங்கங்களால் செய்யப்படுவது போல் ஊழியர்களுக்கு தன்னார்வ நன்கொடை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.


அரசு தரப்பில் வாதாடிய அட்வகேட் ஜெனரல் சி.பி., "அரசாங்க உத்தரவு என்பது சம்பளத்தை ஒத்தி மட்டுமே வைக்கிறது என்றும், அதனால் ஊழியர்கள் சம்பளத்தை இழக்கவில்லை என்றார். ஒரு குறிப்பிட்ட நாளில் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று சட்டத்தின் எந்த விதிமுறைகளும் விதிக்கப்படவில்லை. உண்மையில், ஒரு குறிப்பிட்ட நாளில் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை நிதிக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்டது. இது பல்வேறு நிர்வாக உத்தரவுகளின் தொகுப்பாகும். சம்பளத்தை வழங்குவதை ஒத்திவைக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது. இது பேரழிவு மேலாண்மை சட்டம், 2005, மற்றும் தொற்றுநோய்கள் நோய் சட்டம், 1897 ஆகியவற்றின் விதிகள், 2020 இல் திருத்தப்பட்ட சட்டத்திலும் கண்டறியலாம் என்று அவர் வாதிட்டார்.