ஜம்மு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படை முகாம் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று அதிகாலை சுமார் 3:30 மணிக்கு இந்திய எல்லைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த பயங்கரவாதிகள் 4 பேர் சம்பல் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்புப் படையின் 45 படைப்பிரிவு முகாம் மீது தாக்குதல் நடத்தினர். 


இந்த தாக்குதலையடுத்து, இந்திய தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்நிலையில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்த முயற்சி செய்த தீவிரவாதிகளை பாதுகாப்படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். 


இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து அதிகளவில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.