நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின், உதவியாளர் ஜபீர் மோதி லண்டனில் பிரிட்டனின் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1993-ம் ஆண்டில் 300-க்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கிய மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தின் சூத்திரதாரியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமை தேடப்படும் பயங்கரவாதியாக இந்திய அரசு அறிவித்துள்ளது.


துபாயில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக நம்பப்படும் தாவூத் இப்ராஹிம் அங்கிருந்தவாறு கூட்டாளிகளையும், கூலிப்படையினரையும் வைத்து இந்தியாவில் ஆள்கடத்தல், மிரட்டிப் பணம் பறிப்பது உள்ளிட்ட குற்றச்செயல்களை செய்து வருகிறான். 


மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு சதி திட்டம் தீட்டியவர் தாவூத் இப்ராகிம். நிழல் உலக தாதாவான இவர், தற்போது இந்தியாவின் தேடப்படும் குற்றவாளி ஆக இருக்கிறார். 


தற்போது பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டி வரும் நிலையில், அவரது உதவியாளர் ஜபீர் மோதி லண்டனில் பிரிட்டனின் பாதுகாப்புப் பிரிவினரால், அங்குள்ள ஹில்டன் ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டார். 



ஜபீர் மோதி, தாவூத் இப்ராஹிமின் நிதி மேலாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது..!