புதுடெல்லி: இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ( Indira Gandhi International Airport) நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட வேண்டியிருந்தது அல்லது திங்களன்று தாமதமாகிவிட்டன, நூறு ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பர் மாதத்தில் அதிக குளிர் காலத்தால் தேசிய தலைநகரை அடர்த்தியான மூடுபனி மூடியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து (ஐ.ஜி.ஐ.ஏ) இருந்து குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 21 விமானங்கள் திசை திருப்பப்பட்டன. 300 க்கும் மேற்பட்டவை தாமதமாகிவிட்டன. கடுமையான குளிர்ச்சி, வெப்பநிலை வெகுவாகக் குறைந்து, மூடுபனி நிலவுவதால் நாள் முழுவதும் விமானப் புறப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.


இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு விமான நிறுவனமான இண்டிகோ, வட இந்தியாவில் அடர்த்தியான மூடுபனி அதன் செயல்பாடுகளை சீர்குலைத்தது என்று தெரிவித்துள்ளது. "நாங்கள் தொடர்ந்து நிலைமையை கவனித்து வருகிறோம். எங்கள் சமூக தளங்களில் நிகழ்நேர புதுப்பிப்புகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம்" என்று விமான நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 


மூடுபனியால் பாதிக்கப்பட்ட ஏர் ஏசியா இந்தியா, கோ ஏர் மற்றும் ஸ்பைஸ்ஜெட் போன்ற நிறுவனங்கள், பயணிகள் விமான நிலையத்திற்கு புறப்படுவதற்கு முன் நிலைமையை சரிபார்க்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது. வானிலை காரணமாக தாமதம் அல்லது ரத்து ஆகலாம். அதனால் வலைத்தளம் மற்றும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறோம் எனத் தெரிவித்துள்ளது.


விமானத்தில் ஏறிய பல பயணிகள் விமானம் புறப்படுவதற்கு பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. "நாங்கள் புறப்படும் வரிசையில் 68 வது இடத்தில் இருக்கிறோம். வெளிச்சம் குறைவாக இருப்பதால் தற்போது டெல்லியில் இருந்து புறப்படுவதில்லை... புறப்படும் நேரம் தற்போது தீர்மானிக்கப்படவில்லை. நாங்கள் இறங்கி வீட்டிற்குச் செல்ல வேண்டுமா?” என்று ட்விட்டரில் மோஹித் ஜோஷி என்ற பயணி கூறியுள்ளார்.


தேசிய தலைநகரம் 1901 -க்கு பிறகு அதிக குளிரான நாளையே பதிவு செய்துள்ளது. சஃப்தர்ஜங் வானிலை ஆய்வு நிலையத்தில் அதிகபட்ச வெப்பநிலை 9.4 C அளவிற்கு சரிந்தது.


"1901 க்குப் பிறகு டிசம்பர் மாதத்தில் அதிக குளிர் பதிவானது இது இரண்டாவது முறையாகும். வழக்கமாக, ஜனவரி மாதத்தில் தான் அதிக குளிர்காலம் இருக்கும். ஆனால் இந்த முறை, குளிர் டிசம்பர் மாதத்திலேயே பல சாதனையை முறியடித்தது" என்று புது தில்லியின் பிராந்திய வானிலை முன்னறிவிப்பு மையத்தின் தலைவர் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா கூறினார். 


"அடுத்த சில நாட்களில் வெப்பநிலையில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்படக்கூடும். ஏனெனில் குளிர்ந்த வடக்கு-மேற்கு காற்று மெதுவாக கீழைக்காற்றுகள் மாற்றப்பட்டு, காற்றின் திசையில் ஏற்படும் மாற்றம் காரணமாக வெப்பநிலை சிறிது அதிகரிக்கும். ஆனாலும் குளிராகவே இருக்கும்” என்று ஸ்ரீவாஸ்தவா மேலும் கூறினார்.


டிசம்பர் 26 முதல் குறைந்தபட்ச வெப்பநிலை கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, ஹரியானா மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசம் மற்றும் வடக்கு மத்தியப் பிரதேசத்தில் கடுமையான குளிர் அலை ஏற்பட்டு உள்ளது.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது