இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் முச்சந்திப்பில் உள்ள சிக்கிம் எல்லையில் டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் படையை குவித்து உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், டோக்லாம் பூமி பகுதியில் நிலைமையை கைப்பற்றும் சீனாவின் முயற்சியை நாம் முறியடிக்க வேண்டும். எதிர்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிரிக்க கூடும் என நான் கருதுகிறேன்.


உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோட்டு ஒழுங்குமுறை பற்றிய வேறுபட்ட கருத்துகள் உள்ள நிலையில் இந்த நிலைமையே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.