புதுடெல்லி: வடக்கு டெல்லியில் உள்ள ஒரு குடும்பம், நள்ளிரவு வீடு திரும்பியபோதே துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. அதன் சி.சி.டி.வி காட்சிகள் வெளியிடப்பட்டு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சம்பவம் குறித்து காவல் துறையில் புகார் அளித்த வருண் பஹ்ல் கூறியது, "நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் தனது மனைவியின் பெற்றோரர் வீட்டிலிருந்து மாடல்டவுனில் உள்ள தங்கள் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, எங்கள் வீட்டுக்கு முன்பு மூன்று ஆண்கள் முகத்தை மூடி, தனது வீட்டிற்கு வெளியே ஒரு மோட்டார் சைக்கிளில் நின்றுக்கொண்டு இருந்தார்கள். அப்பொழுது எங்கள் வீட்டின் கேட்டும் திறந்திருந்தது. அதைப் பார்த்ததும் ஒரு பதட்டமான சூழல் நிலவுகிறது என்று தோன்றியது. குடும்ப உறுப்பினர்கள் வீட்டிற்குள் போக வேண்டாம் என்று கூறினார்கள். ஆனால் நான் வேகமாக வீட்டிற்கு சென்று, பின்னர் வாசல் கதவை சாத்தலாம் என்று நினைத்து, எனது காரை வீட்டின் முன் வராந்தாவில் நிறுத்தினேன். பின்னர் வெளிக்கதவை மூட சென்றேன். 


அப்பொழுது அந்த மூன்று பேரும் என்னை சூழ்ந்து கொண்டு தள்ளியவாறு உள்ளே நுழைகிறார்கள். எங்கள் காரில் இருந்து பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு, என்னையும், என் மனைவி மற்றும் குழந்தைகளை மிரட்டி விட்டு தப்பி ஓடிச்சென்றார்கள். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.


இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கார் பார்க்கிங் பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா மூலம். திருட்டு சம்பவம் குறித்து காட்சிகள் வெளியாகி உள்ளது.