வறுமையால் குழந்தையை 200ரூ விற்ற தந்தை!
திரிபுராவில் வறுமையால் தன்னுடைய 8 மாத குழந்தையை 200ரூ அவருடைய தந்தை விற்றுள்ளார்.
திரிபுராவில் உள்ள மஹரன்பூர் என்ற இடத்தில் தந்தை ஒருவர் தன்னுடைய 8 மாதம் நிறைத்த பெண் குழந்தையை 200ரூ -க்கு விற்றுள்ளார். இச்சபவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொழுது வறுமை காரணமாக தன்னுடைய குழந்தையை விற்றதாக அந்த குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.