புனே: மராட்டிய மாநிலம் புனேவில் ஒரு பேக்கரியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் பலியாகியிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விபத்து அதிகாலை 4 மணி அளவில் ஒன்பது மாடி கட்டிடம் தரை தளத்தில் அமைந்துள்ள `பேக்ஸ் கடையில் நடந்தது.


புனேவின் கோந்த்வா பகுதியில் உள்ள பேக்கரியில் காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது என தகவல் வெளிவந்து உள்ளது. விபத்து நேரிட்டதற்கான காரணம் தெரியவரவில்லை. 


தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே 6 பேர் உயிரிழந்து உள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.