மும்பையில் டாடா கேன்சர் மருத்துமனையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பரேல் பகுதியில் டாடா மெமோரியல் கேன்சர் மருத்துமனை இயங்கி வந்தது. இந்த மருத்துமனையின் அடித்தளத்தில் இன்று காலை 9 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. 


அதனடிப்படையில் சுமார் 4 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை. இந்த விபத்து குறித்து போலீசாரும் ஒருபுறம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.