கோவா மாநில முதல்வர் மனோகர் பரிக்கர் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஆண்டு முதல் சிகிச்சை பெற்று வந்தார். முதலில் அமெரிக்கா, பின்னர் சில மாதங்களாக டெல்லியில் உள்ள AIIMS மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நலம் முன்னேற்றம் அடைந்ததையடுத்து, வீடு திரும்பிய அவர் ஓய்வில் இருந்தார். ஒரு சில மட்டும் கலந்துக்கொண்டார். அதிகமான நிகழ்சிகளில் கலந்துக்கொள்ளலாம் இருந்தார். 


கோவா இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்த அவருக்கு திடிரென உடல்நலக் குறைவு ஏற்ப்பட்டது. இந்தநிலையில், அவர் நேற்றிரவு கோவா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.