உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கடந்த 2 நாட்களில் 42 குழந்தைகள் உயிரிழந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விபத்தில் 7 குழந்தைகள் மூளை அலர்ஜி காரணமாகவும் மற்றவர்கள் மற்ற காரணங்களுக்காகவும் பலியாகியுள்ளர். இந்த தகவலை பி.ஆர்.டி. மருத்துவ கல்லூரி முதல்வர் பி.கே. சிங் தெரிவித்துள்ளார்.


இந்த சம்பவம், நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான விசாரணைக்கு, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். 


குழந்தைகள் உயிரிழப்பு விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் ராஜீவ் மிஸ்ரா மற்றும் அவரது மனைவியும், மருத்துவருமான பூர்ணிமா சுக்லா ஆகியோர் நேற்று கான்பூரில் கைது செய்யப்பட்டனர். 


இந்நிலையில், கடந்த 2 நாள்களில் கோரக்பூர் பி.ஆர்.டி அரசு மருத்துவமனையில் 42 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம், அடுத்த அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.