குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் வெற்றி பெற்ற பிரதமர் மோடியை சந்தித்த பள்ளி மாணவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற சட்ட சபை தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றது. 82 சட்டசபை தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலில் கடந்த 1997-98 தேர்தல் முதல் தொடர் வெற்றிப் பெற்றுள்ள பாஜக, தற்போது தனிபெரும்பான்மையோடு வெற்றிப்பெற்று 6 வது முறையாக, தங்களது ஆட்சியை பலமாக ஊன்ற உள்ளது.


அந்த இரண்டு மாநிலங்களில் குறிப்பாக ஏற்கெனவே குஜராத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கின்றது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த இமாச்சல் பிரதேசத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்திருக்கிறது. 


வெற்றி பெற்றதை தொடர்ந்து டெல்லி பாஜக தலைமை செயலகத்தில்நேற்று முதல் பாஜக தொண்டர்கள் கூடி வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.மேலும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிரதமர் மோடிக்கு நேற்று முதல் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருந்தனர்.


அதை தொடர்ந்து, தற்போது பிரதமர் நரேந்திர மோடி இலட்சத்தீவுகள் பயணம் மேற்கொண்ட வேளையில் அவரை சந்தித்த பள்ளி மாணவர்கள் அவரை வரவேற்று வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.