காஷ்மீர் பிரச்னையில் இந்தியா மீது பாகிஸ்தான் அணு ஆயுத போர் தொடுக்கும் என பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி சையது சலாலுதீன் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளான். இந்த மிரட்டல் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீடியோவில் பயங்கரவாதி பேசுகையில்:- காஷ்மீர் பிரச்னையில் இந்த முறை காஷ்மீரிகள் விட்டுக் கொடுக்க போவதில்லை. இந்தியா மீது அணு ஆயுத போர் தொடுக்கப்படும். இந்திய மண்ணில் ரத்த ஆறு ஓடும். காஷ்மீர் விவகாரத்தால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மூன்று முறை போர் நடைபெற்றுள்ளது. இந்த 4-வது உரிமைப் போர் விரைவில் நடைபெறும் அதில் காஷ்மீரிகள் நிச்சயம் வெல்வார்கள் என கூறியுள்ளான்.


பயங்கரவாதியின் இந்த பகிரங்க மிரட்டல் பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புக்கள் சுதந்திரமாக உலா வருவதையும், பாகிஸ்தானின் நிலைப்பாட்டை காட்டுகிறது..