தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து வானிலை அதிகாரிகள் தெரிவித்தது: 


தமிழகம் மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை வலு குறைந்து காணப்பட்டதால் இன்று முதல் 4 நாட்கள் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும். ஜூலை 24ம் தேதி வரை 100 மி.மீ., மழை பெய்திருக்க வேண்டிய நிலையில், 70 மி.மி., மழையே பெய்துள்ளது. இந்த ஆண்டு 28% குறைந்து பெய்துள்ள மழை, 2016-ம் ஆண்டு 3%, 2015-ம் ஆண்டு 7%, 2014-ம் ஆண்டு 11% குறைவாக பெய்துள்ளது.


மேலும் ஜூலை 29 முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. 


இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.