காஜியாபாத்: டெல்லியின் புறநகர பகுதியான காஜியாபாத்தின் இந்திராபுரம் பகுதியில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை ஒரு அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தள்ளது. இந்திராபுரத்தின் வைபவ்கண்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது மாடியில் இருந்து செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 3) காலை மூன்று பேர் குதித்தனர். குதித்தவர்களில் கணவரும் அவரது இரண்டு மனைவிகளும் அடங்குவர். இவர்களில், கணவரும் ஒரு மனைவியும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அதே நேரத்தில் மற்றொரு மனைவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சையின் போது இறந்தார். மறுபுறம், வீட்டின் உள்ளே இரண்டு குழந்தைகளின் உடலும் ஒரு முயலும் இறந்த நிலையில் காணப்பட்டன. தகவல்களின்படி, இறந்த குல்ஷனின் குடும்பம் சாஹிபாபாத்தில் வசிப்பவர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீட்டின் சுவரில் ஒரு தற்கொலைக் குறிப்பு எழுதப்பட்டுள்ளது. இதில் நிதி பற்றாக்குறையும், ராகேஷ் வர்மா என்ற நபரும் தற்கொலைக்கு காரணம் என்று கூறப்பட்டு உள்ளது. மேலும் எங்களின் ஐந்து உடல்களை ஒன்றாக எரிக்க வேண்டும் என்றும் ஏ;எழுதப்பட்டு இருந்தது. இது தற்கொலை வழக்காக இருக்கலாம் என்ற அடிப்படையில் காவல்துறை விசாரணை தொடங்கியுள்ளது. 


மாடியில் இருந்து குதிப்பத்துக்கு முன்பு, கணவரும் அவரது இரண்டு மனைவிகளும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகளை கழுத்தை நெரித்து குத்திக் கொலை செய்தனர். இது மட்டுமல்லாமல், வீட்டு வாழ்ந்த முயலும் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளது.


மறுபுறம், சுவரில் எழுதப்பட்ட தற்கொலைக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ராகேஷ் வர்மா என்ற நபர் குல்ஷனுக்கு பணம் கொடுக்கவில்லை என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு, காவல்துறையினரால் மூன்று குழுக்கள் விசாரணைக்காக அமைக்கப்பட்டுள்ளன. ராகேஷ் வர்மாவை போலீசார் தேடத் தொடங்கியுள்ளனர்.