Bizarre News: விவாகரத்து வழக்குகள் தற்போது அதிகரித்துவிட்டதாக பொதுவான கருத்து உள்ளது. ஆனால், முன்பை விட குடும்ப வன்முறை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து ஆண் - பெண் இருபாலருக்கும் இடையே நன்கு விழிப்புணர்வு  ஏற்பட்டுள்ளது. அதன் பலனாகவே விவகாரத்து வழக்குகள் நீதிமன்றங்களை நாடுகின்றன. விவகாரத்து வழக்குகளில் இரு தரப்பையும் நன்கு விசாரித்து நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகள் நிச்சயம் மிக மிக முக்கியமானவை ஆகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், சமீபத்தில் விவாகரத்து வழக்கு ஒன்றுக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. அதாவது, பஞ்சாபை சேர்ந்த ஒரு மனைவி கணவனை நோக்கி திருநங்கை என அழைப்பது என்பது குரூரமானது என்று தெரிவித்துள்ளது. கணவன் - மனைவி இருவருக்கும் குடும்ப நல நீதமன்றம் விவாகரத்து அளித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த பெண் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 


மேல்முறையீட்டில் தீர்ப்பு


இந்த மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் சுதிர் சிங் மற்றும் ஜஸ்ஜித் சிங் பேடி ஆகியோர் அடங்கிய அமர்வு இதனை விசாரித்தது. மேலும், இதன் விசாரணையில் கணவனின் தாயார் அளித்த வாக்குமூலங்கள் முக்கியமானவை ஆகும். அதில் தனது மருமகள் தன் மகனை பார்த்து திருநங்கை என அழைத்ததாக தெரிவித்தார். அதாவது ஒரு தாயை நோக்கி நீங்கள் திருநங்கையை பெற்றெடுத்தவர் என தூற்றுவது குரூரமானது என நீதிமன்றம் தெரிவித்து அந்த மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்தது.


மேலும் படிக்க | “இந்திரா.. இந்திரா” ஓங்கி ஒலிக்கும் குரல்.. யார் இந்த பிரியங்கா காந்தி? அவர் கடந்து வந்த பாதை!


கணவரின் விவாகரத்து மனு


முன்னதாக, கணவர் தரப்பில் இருந்து குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் அதிர்ச்சியளிக்கும் வகையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அதில் அவரின் மனைவி ஆபாச படங்களுக்கும், மொபைல் கேம்ஸ்களுக்கும் அடிமையானவர் என குறிப்பிட்டுள்ளார். உடலுறவு மேற்கொள்ளும்போது அதன் நேரத்தை அவரின் மனைவி கணக்கிடுவார் என்றும் ஒவ்வொரு உடலுறவும் குறைந்தது 15 நிமிடங்கள் வரை நிலைக்க வேண்டும் என்றும் ஒரு இரவுக்கு மூன்று உடலுறவு மேற்கொள்ள வற்புறுத்துவார் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். 


மேலும் அந்த பெண் கணவனை தொடர்ந்து திட்டியபடியே இருப்பார் என்றும் அவளுக்கு ஈடுகொடுக்க தான் உடல் ரீதியாக வலுவாக இல்லை என்றும் எப்போதும் தன்னை திட்டுவார் எனவும் கணவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். தான் வேறொரு ஆணை திருமணம் செய்துகொள்ள விருப்பம் இருப்பதாகவும் தன்னிடம் அவள் தெரிவித்திருக்கிறாள் எனவும் கணவர் தெரிவித்துள்ளார்.  இருப்பினும், இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவரின் மனைவி மறுத்துள்ளார். கணவர்தான் தன்னை வீட்டைவிட்டு துரத்தியதாகவும் கூறியுள்ளார். 


குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்த மனைவி


அந்த பெண் மேலும் கூறுகையில்,"மயக்க நிலையில் இருந்தபோது, ​​​​அவர்கள் அவளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக தனக்கு போதைப் பொருளை கொடுத்தது மட்டுமல்லாமல், ஒரு மாந்திரீகம் செய்த தாயத்தை கழுத்தில் கட்டினர்" என்றும் குற்றஞ்சாட்டினர்.


2017ஆம் ஆண்டு இவருக்கும் திருமணமாகி உள்ளது. திருமணமான சில மாதங்களிலேயே அந்த பெண் அவரது பெற்றோர் வீட்டுக்கேச் சென்றுள்ளார். அதன்பின்னர் தான் குடும்ப நல நீதிமன்றத்தில் கணவர் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார். ஆறு ஆண்டுகளாக தம்பதியர் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.


மேலும் படிக்க | அது முறையான ஆவணம் அல்ல.. இனி ஆதார் அட்டை இதற்கு பயன்படாது -உச்சநீதிமன்றம் அதிரடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ