டாக்கா: எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி வெங்காய (ONION) ஏற்றுமதியை தடை செய்வதற்கான இந்தியாவின் முடிவு குறித்து பங்களாதேஷ் அதிகாரப்பூர்வமாக தனது "ஆழ்ந்த கவலையை" தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உள்நாட்டு சந்தையில் வெங்காயம் கிடைப்பதை அதிகரிக்கவும், விலைகளைக் கட்டுப்படுத்தவும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து வகையான வெங்காயங்களையும் ஏற்றுமதி செய்ய இந்திய அரசு திங்கள்கிழமை தடை விதித்தது.


 


ALSO READ | Onion: வெங்காய ஏற்றுமதிக்கான தடை உடனடியாக அமலுக்கு வந்தது...


2020 செப்டம்பர் 14 ஆம் தேதி இந்திய அரசு திடீரென அறிவித்திருப்பது, இது தொடர்பாக 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் இரு நட்பு நாடுகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்களையும், இந்த நேரத்தில் உருவான பரஸ்பர புரிதலையும் பலவீனப்படுத்தியுள்ளது என்று டாக்காவை தளமாகக் கொண்ட இந்திய உயர் ஸ்தானிகராலயம் மூலம் அனுப்பிய கடிதத்தில் பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இந்த கடிதம் புதன்கிழமை மாலை தாமதமாக பங்களாதேஷ் ஊடகங்களுக்கு கிடைத்தது.


வெங்காய ஏற்றுமதியை மீண்டும் தொடங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கடிதத்தில் கோரியுள்ளது.


பங்களாதேஷ் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்குவது பாதிக்கப்படும்
இது தொடர்பாக இந்தியாவின் திடீர் அறிவிப்பு பங்களாதேஷ் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விநியோகத்தை பாதிக்கும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 


அந்த கடிதத்தின்படி, 2020 ஜனவரி 15-16 தேதிகளில் டாக்காவில் நடைபெற்ற இரு நாடுகளின் வர்த்தக அமைச்சகங்களின் செயலாளர் மட்டக் கூட்டத்தில், அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு ஏற்றுமதி தடைகளை விதிக்க வேண்டாம் என்று பங்களாதேஷ் இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.


இதுபோன்ற தடை தேவைப்பட்டால் அதை முன்னரே அறிவிக்குமாறு பங்களாதேஷும் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


 

Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR 


ALSO READ | சந்தையில் உயர்ந்து வரும் காய்கறி விலை: குடைமிளகாய் ரூ.100, தக்காளி ரூ.80-க்கு விற்பனை