கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் மதிப்பு ஐநா சபையில் பல மடங்கு அதிகரித்துள்ளது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

7 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, இன்று டெல்லி திரும்பினார். விமான நிலையத்தில், அவருக்கு பாஜக-வினர் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். தொண்டர்கள் பாட்டு பாடியும், இசை நிகழ்ச்சி நடத்தியும் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.


இதனையடுத்து விமான நிலையம் அருகே நடைப்பெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில்., "என்னை வரவேற்றக அதிகளவில் கூடிய தொண்டர்களுக்கு நன்றி. மறக்க முடியாத வரவேற்பாக அமைந்தது. இந்த தருணத்தில், ஒவ்வொரு இந்தியனுக்கும் தலைவணங்குகிறேன்.


கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலுக்கு பின்னர் அமெரிக்கா சென்றேன். தற்போதும், அமெரிக்கா சென்று வந்துள்ளேன். கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் மரியாதை அதிகரித்துள்ளது. இதற்கு 130 கோடி மக்களே காரணம் என தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து பேசிய அவர்., அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள், தங்களது ஆதரவினை இந்தியாவிற்கு தெரிவித்ததாகவும், அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்தார்.  மேலும் தான் அங்கு தான், ஜனநாயகத்தின் வலிமையை அறிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.


இந்தியா - அமெரிக்கா இடையிலான நட்புறவை வெளிப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஹவ்டி மோடி நிகழ்ச்சி பெரிய திருவிழா போல் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில், குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியினர் பங்கேற்றனர். வெள்ளை மாளிகை பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற அதிபர் டிரம்ப்பிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார். 


ஐக்கிய நாடுகள் சபையில், உலக தலைவர்களை சந்தித்த போது ஹவ்டி மோடி குறித்து பேசினர். உலகளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் நமது வெற்றி உணரப்படுகிறது என பெருமிதம் தெரிவித்தார்.