ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியர்கள் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர் - வீராங்கனைகள் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


இந்தோனேசியாவில் நடைபெற்ற 18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 15 தங்கம் உள்பட 69 பதக்கங்களை இந்தியா குவித்தது. பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் நேற்று முன் தினம் நாடு திரும்பினர். அவர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தனர்.


அவர்களை வாழ்த்தி ஊக்கப்படுத்தி பேசிய மோடி, பின்னர் வீராங்கனைகள் டூட்டிசந்த், ஸ்வப்னா பர்மன், ஹிமா தாஸ் உள்ளிட்டோரை தனித்தனியாக அழைத்து பாராட்டினார்.