புதுடெல்லி: டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை இன்டிகோ ஏர்லைன்ஸ் மற்றும் ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் அருகருகே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், இண்டிகோ விமானம் தரையிறங்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, ஸ்பைஸ் ஜெட் விமானம் கிளம்ப தயாரானது. இரண்டாவது ஓடுபாதையில், இரண்டு விமானங்களும் நேருக்கு நேர் வந்ததால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பெரிய மோதல் தவிர்க்கப்பட்டது. 


100 கணக்கான பயணிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன. சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மத்திய சிவில் விமான போக்குவரத்து ஜெனரல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 


முன்னதாக இன்று காலை கோவாவில் இருந்து பணியாளர்கள் உட்பட 161 பேருடன் மும்பைக்கு புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானம் ஓடுதளத்தில் சறுக்கி விபத்துக்குள்ளானது. இதில் 12 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. எனினும் 161 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.