பீகார் மாநில அரசு தேர்வில் ஆளுநர்கள் அரசாங்கத்தின் கைப்பாவையாக பாவிக்கப்படுகிறார்களா? என கேள்வி கேட்கப்பட்டது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஞாயிறு அன்று நடைப்பெற்ற பீகார் பொது சேவை ஆணையத்தின் (பிபிஎஸ்சி) மெயின்ஸ் தேர்வின் வினாத்தாளில், மாநில ஆளுநரின் பங்கு குறித்து கேட்கப்பட்ட கேள்வி ஒன்று பெரும் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது.


ANI செய்தி நிறுவனம் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள இந்த வினாத்தாள், ஆளுநர்களை "வெறும் கைப்பாவை" என்று கருதுகிறீர்களா என்று தேர்வாளர்களிடம், தேர்வாணையம் கேட்டுள்ள கேள்வி நாட்டு மக்கள் கவனத்தை தற்போது ஈர்த்துள்ளது.



"இந்தியாவில், குறிப்பாக பீகாரில் மாநில அரசியலில் ஆளுநரின் பங்கை விமர்சன ரீதியாக ஆராயுங்கள். அவர் வெறும் கைப்பாவையா? ” என்பது தான் அந்த கேள்வி.  பீகார் பொது சேவை ஆணையத்  தேர்வின் பொது அறிவு பிரிவு இரண்டாவது தாளில் கேட்கப்பட்ட கேள்வி இது.


இந்த கேள்வி தொடர்பாக சர்ச்சை அடங்குவதற்கு முன், நாட்டில் அதிக எண்ணிக்கையிலான அரசியல் கட்சிகள் குறித்து தங்கள் கருத்து குறித்து ஆர்வலர்களிடம் கேட்ட மற்றொரு கேள்வி அதே கேள்வி தாளில் இருந்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசியலில் பல கட்சிகள் இருப்பதன் நன்மை தீமைகள் குறித்து கேட்கப்பட்ட கேள்வி தான் அது.


இது தவிர, ஒரு கேள்வி நீதித்துறை செயல்பாட்டின் பிரச்சினை குறித்து பேசியுள்ளது. 


வினாத்தாள் மீதான வரிசையான விமர்சனங்களுக்கு மத்தியில் இதுகுறித்து விளக்கம் அளித்த பீகார் சர்வீஸ் கமிஷன் அதிகாரிகள், இது போன்ற கேள்விகளுக்கும் எங்கள் உறுப்பினர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. வினாத்தாளை தயார் செய்த ஆசிரியரின் தவறு. 


இருப்பினும் கேள்வியில் தவறில்லை. பொம்மை என்ற வார்த்தையை மட்டும் தவிர்த்திருக்க வேண்டும் என்றனர். 2 ஆண்டுகளுக்கு முன் இதே போன்று நடத்தப்பட்ட அரசு தேர்வில் 5 நாடுகள் என குறிப்பிடப்பட்ட கேள்வியில் சீனா, நேபாளம், இங்கிலாந்து, இந்தியா மற்றும் காஷ்மீர் என குறிப்பிட்டிருந்ததும் சர்ச்சையாக்கப்பட்டது.