புதுடில்லி: மத்திய புலனாய்வு ஏஜென்சி இந்தியா உள்துறை அமைச்சகம் ஒரு அறிக்கை அனுப்பியுள்ளார் அதில் பாக்கிஸ்தானின் ஐஎஸ்ஐ(ISI) இந்தியாவில் பெரும் தற்கொலை படைத் தாக்குதலை நடத்த ஜெய்ஷ்-இ-முகமது(Jem) மற்றும் ISIS அமைப்பு பயங்கரவாதிகளை இணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. மத்திய புலனாய்வுத் துறை அளித்த அறிக்கையின்படி, ஒரு சில நாட்களுக்கு முன்பு பாக்கிஸ்தானின் ஐஎஸ்ஐ ஆப்கானிஸ்தானில் ஒரு இரகசிய இடத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்.(ISIS) மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது தீவரவாதிகளின் அமைப்பு கூட்டத்தை நடத்தி உள்ளது. 


காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு கொடூர தாக்குதலை நடத்தியது. தற்போது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பும் சேர்ந்து இந்தியாவில் தற்கொலை படை தாக்குதலை நடத்தக்கூடும் என புலனாய்வுத் துறை எச்சரித்துள்ளது.