ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, பாதுகாப்புப் படையினரால் தீவிரமான கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீவிரவாதிகள் தங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து, இந்தக் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. 


இந்நிலையில், குல்காம் மாவட்டத்தில் இன்று, பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டபோது, அங்கு தீவிரவாதிகள் இருப்பது தெரியவந்தது. அதனால், பாதுகாப்புப் படையினர் அதிரடியாகக் களத்தில் இறங்கினர். 


அப்போது நடந்த தாக்குதலில், இஸ்புல் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில், பாதுகாப்புப் படையினருக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.