ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது அதில் இரண்டு தீவிரவாதிகள் காயமடைந்துள்ளனர்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் அருகேயுள்ள குண்டலன் பகுதியில் பாதுகாப்பு படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 


அப்போது, அப்பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். அப்போது, இரண்டு தீவிரவாதிகள் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அங்கு பதற்றம் நிலவி வருகின்றது.