சுப்ரீம் கோர்ட்டின் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட தினேஷ் மகேஸ்வரி, சஞ்சீவ் கன்னா ஆகியோர் இன்று பதவியேற்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி ஐகோர்ட் நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி ஆகியோரை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிக்கும்படி கொலிஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. 
 
அதன்படி தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோரை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். 


இந்நிலையில், தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக  இன்று காலை பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.