பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில், தமிழில் வைக்கப்பட்டிருந்த பொங்கல் வாழ்த்து பேனர்களை கன்னட அமைப்பினர் கிழிந்தெறிந்துள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெங்களூருவின் ட்ரினிட்டி ரோட் பகுதியில் வைக்கப்பட்டிருந்த இந்த வாழ்த்து பேனர்களை கன்னட அமைப்பினர் கிழித்தெரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதமும் இதேப்போல் தமிழில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை கன்னட அமைப்பினர் கிழித்து எறிந்தனர். 


இந்த செயல்பாட்டிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. எனினும் எந்த மாற்றமும் இல்லை, இந்நிலையில் தற்போதும் அங்கு தமிழில் வைக்கப்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்டது வருவது பெங்களூரு வாழ் தமிழர்களிடையே பதட்டத்தினை ஏற்படுத்தியுள்ளது!.