அன்ஷூ பிரகாஷ் வழக்கில் டெல்லி காவல்துறை ஆர்வம் காட்டி வருவது போல, மற்ற வழக்குகளிலும் ஆர்வத்தை காட்டினால் நன்றாக இருக்குப் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி தலைமை செயலர் அன்ஷூ பிரகாஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் விசாரணை தொடர்பாக அரவிந்த கெஜ்ரிவால் இல்லத்தில் டெல்லி காவல்துறையினர் விசாரணை செய்தபோது, டெல்லி காவல்துறையிடம் இவ்வாறு சூசகமாக தெரிவித்துள்ளார்.


அன்ஷூ பிரகாஷ் வழக்கில் டெல்லி காவல்துறை விசாரணை செய்து வருவது வரவேற்கத்தக்கது, இந்த வழக்கில் டெல்லி மிகுந்த ஆர்வத்துடன் பலரையும் விசாரணை செய்து வருகிறது. இந்த செயல்பாடானது வரவேற்க தக்கது. ஆனால் அதே வேலையில் இந்த ஆர்வத்தினை மற்ற வழக்குகளிலும் அவர்கள் காட்டினால் நன்றாக இருக்கும்.


குறிப்பாக, நீதிபதி லோயாவின் மரண வழக்கில் அமித் ஷாவின் பங்கைப் பற்றி இதே தைரியத்துடன் பரிசீலித்து, தங்கள் விசாரணை தொடர்ந்தால் நாடு முழுவதிலும் உள்ள மக்கள் உங்களை போற்றுவர் என குறிப்பிட்டுள்ளார்.


இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...