கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த பெண்மனி, தன்னை TV பார்க்கவிடாமல் தொல்லை செய்த கணவரை கத்தியால் குத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மணற்காடு என்ற பகுதியில் வசித்து வருபவர் அபிலாஷ். இவர் கடந்த செப்டெம்பர் 2-ஆம்  நாள் அன்று வெளியே சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது  அவருடைய மனைவி மிகவும் பிசியாக சீரியல் பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். சிறுது நேரம் காத்திருந்த அபிலாஷ்., தனக்கு பசிப்பதாகவும், உணவு அளிக்குமாறும் கேட்டுள்ளார்.


மனைவியோ.. கொஞ்ச நேரம் பொறுத்துக் கொள்ளுங்கள் என சொல்லவே, இப்படியே சில நிமிடங்கள் கழிந்து உள்ளது. பின்னர் மீண்டும் மீண்டும் அபிலாஷ் உணவு வேண்டும் என கேட்க., கோபம் அடைந்த மனைவி வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.


வெளியே சென்று வந்த கணவனுக்கு உணவு அளிக்காமல் அப்படி என்ன டிவி பார்க்க வேண்டியிருக்கிறது என கணவர் கேட்க, வாக்குவாதம் முற்றியுளது. இந்தனால் கோபமடைந்த மனைவி அருகில் இருந்த ஒரு கத்தியை எடுத்து கணவனை தாக்கி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 


சம்பயிடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கணவர்கள் கவனத்திற்கு _ கேரளாவில் மட்டும் இல்லைங்க., தமிழகத்திலும் டிவி சீரியல்கள் அதிகமாக தான் ஒளிப்பரப்பாகிறது. பார்த்து நடந்துக்கோங்க...