Bangalore Livin Partner Murder: பெங்களூருவில் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டில் தனது லிவ்-இன் பாட்னரை பிரஷர் குக்கரால் அடித்துக் கொன்றதற்காக 29 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில், தனது காதலி தன்னை ஏமாற்றுகிறார் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரும் சண்டையிட்டபோது இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த வைஷ்ணவ் (29) மற்றும் தேவா (24) இருவரும் சுமார் இரண்டு ஆண்டுகளாக பெங்களூருவில் ஒன்றாக லிவ்-இன் உறவில் வாழ்ந்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர். அவர்கள் கல்லூரியில் இருந்து ஒருவரையொருவர் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  இவர்கள் பெங்களூரு கோரமங்களாவில் உள்ள விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். தேவா கொச்சியையும், கொலையாளி வைஷ்ணவ் திருவனந்தபுரத்தையும் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில், வைஷ்ணவ், தேவாவை பிரஷர் குக்கரால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. தேவாவின் தங்கை அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாமல் பக்கத்து வீட்டுக்காரரைத் தொடர்பு கொண்டபோது இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.


மேலும் படிக்க | தாயை நிர்வாணப்படுத்தி, மகனை அடித்தே கொன்ற கொடூர கும்பல்! மத்தியப் பிரதேச கொடுமை


இந்த சம்பவத்திற்குப் பிறகு வைஷ்ணவ் தப்பி ஓடிவிட்டார். ஆனால் போலீசார் அவரைக் கண்டுபிடித்து கைது செய்தனர் என தெரிவிக்கப்படுகிறது. இருவரும் ஒன்றாக லிவ்-இன் உறவில் வாழ்வது அவர்களின் பெற்றோருக்குத் தெரியும் என்று போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். வைஷ்ணவ் தேவாவின் மேல் கொண்ட சந்தேகத்தால், அவர்கள் இடையே சண்டை வந்ததும் அவர்களின் பெற்றோருக்கு தெரிந்துள்ளது என கூறப்படுகிறது. அவர்கள் அவர்களுக்கு இடையேயான பிரச்னையை தீர்க்க முயன்றனர். தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக அக்கம்பக்கத்தினர் போலீசாரிடம் கூறியுள்ளனர்.


"நான் சம்பவ இடத்திற்குச் சென்றபோது அந்தப் பெண்ணின் பெற்றோரை சந்தித்தேன். கடந்த சில நாட்களாக இருவரும் சண்டையிட்டுக் கொண்டதாக அவர்கள் என்னிடம் கூறினார்கள். குடும்பத்தினரும் பிரச்சினையை தீர்க்க முயன்றனர்," என்று பெங்களூரு தெற்கு காவல்துறை துணை ஆணையர் சி.கே.பாபா கூறினார். வைஷ்ணவ் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.


டெல்லியில் 26 வயதான ஷ்ரத்தா என்ற பெண்ணை, அவரின் காதலன் அப்தாப் அமீன் என்பவர் கொடூரமாக கொன்ற சம்பவம் கடந்தாண்டு நவம்பர் மாதம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து, அந்த கொலை குறித்த பல்வேறு தகவல்கள் பலரையும் நெஞ்சை உலுக்கியது. அப்தாப் அமீன், ஷ்ரத்தாவை 35 துண்டுகளாக வெட்டி, அவற்றை ஒவ்வொன்றாக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் புதைத்திருந்தார். 


மேலும் படிக்க | 'எங்கள் மீது சிறுநீர் கழித்தனர்' தலைகீழாக தொங்கப்படவிடப்பட்ட தலித் இளைஞர்... கொடூர சம்பவம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ