மக்களவை தேர்தலுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து முடிந்தது. 51 தொகுதிகளுக்கு நடைபெற்ற இன்றைய வாக்குப்பதிவுல் சுமார் 9 கோடி வாக்களர்களில் சராசரியாக 62.56% வாக்களித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவை தேர்தல் கடந்த மாதம் 11-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களால தேர்தல் நடந்து வருகிறது. ஏப்ரல் 11-ஆம் தேதி 91 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 18-ஆம் தேதி 96 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 23-ஆம் தேதி 116 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 29-ஆம் தேதி 71 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. 


இதைத்தொடர்ந்து இன்று 5-வது கட்டமாக உத்தர பிரதேசம் (14 தொகுதிகள்), ராஜஸ்தான் (12 தொகுதிகள்), மேற்கு வங்காளம் (7 தொகுதிகள்), மத்திய பிரதேசம் (7 தொகுதிகள்), பீகார் (5 தொகுதிகள்), ஜார்க்கண்ட் (4 தொகுதிகள்), காஷ்மீர் (2 தொகுதிகள்) ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைப்பெற்றது.


மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், ராஜ்யவர்தன்சிங் ரத்தோர், ஜெயந்த் சின்கா, அர்ஜுன்ராம் மேக்வால், வீரேந்திர குமார், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், சத்ருகன்சின்காவின் மனைவி பூனம் சின்கா, முன்னாள் முதல்வர்கள் அர்ஜுன் முண்டா, பாபுலால் மாரண்டி ஆகியோர் இன்றைய தேர்தலில் இடம்பெற்ற முக்கிய வேட்பாளர்கள் ஆவர். 51 தொகுதிகளிலும் 8 கோடியே 75 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 


இவர்கள் வாக்களிப்பதற்காக 96,088 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 5 மணியளவில் முடிவடைந்தது.


தேர்தல் ஆணையம் தரப்பில் இன்றிரவு 8 மணியளவில் வெளியான முதல்கட்ட நிலவரப்படி சராசரியாக 62.56% வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக மேற்கு வங்காளத்தில் 74.06% வாக்குகள் பதிவாகின. 


அதற்கு அடுத்தபடியாக மத்தியப்பிரதேசத்தில் 61.93% வாக்குகளும் ஜார்கண்ட் மாநிலத்தில் 61.27% வாக்குகளும் ராஜஸ்தானில் 59.12% வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


அதேவேளையில் உத்தரபிரதேசத்தில் 52.97% வாக்குகளும் பீகாரில்  52. 86% வாக்குகளும் மிகவும் குறைந்தபட்சமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 17.07% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.