உலக புகழ்பெற்ற லண்டன் பிரிட்ஜில் நடந்து சென்றவர்கள் மீது வேனை மோத செய்தும், பரோ மார்க்கெட் பகுதியில் பொதுமக்களை கத்தியால் தாக்கியும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர் மேலும் பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய மூன்று பேரை போலீஸ் சுட்டுக் கொன்றது. 


இந்நிலையில் லண்டன் தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். 


இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டரில் வெளியிட்ட செய்தி:-


“லண்டனில் நடத்தப்பட்டு உள்ள தாக்குதல்கள் அதிர்ச்சி மற்றும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலுக்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். என்னுடைய எண்ணங்கள் அனைத்தும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை பற்றியே உள்ளது, காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்,” 


 



 


இவ்வாறு பதிவிட்டார்.