ரூ.1,590க்கு டிஜிட்டல் பரிமாற்றம் செய்த நபர், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் ‛லக்கி கிரஹாக் யோஜனா' தேர்வில் மெகா பரிசான ரூ. 1 கோடியை வென்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'டிஜிட்டல்' முறையில் பணம் செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், அதை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் அதன் மூலம் வர்த்தகம் செய்யும் வர்த்தகர்களுக்கு, குலுக்கலில், ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. 


இந்நிலையில் இதற்கான அதிஷ்டசாலிகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேர்வு செய்தார். இதில் நுகர்வோருக்கான ‛லக்கி கிரஹாக் யோஜனா' தேர்வில், மெகா பரிசான 1 கோடி ரூபாயை 'சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா' வங்கியின் வாடிக்கையாளர் வென்றார்.